யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலை கிழக்குப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (09) மாலை 4.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சோமசுந்தரம் சிந்துஜா (வயது -21) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

Previous Post Next Post