யாழில் வீடு தேடி வந்த த.தே.ம. முன்னணியினரை விரட்டும் இளைஞன்! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக வீடு தேடி வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை கேள்வி கேட்டு அவர்களை வெளியேறுமாறு விரட்டியுள்ளாா் அந்த வீட்டில் இருந்த இளைஞன் ஒருவா்.

குறித்த இளைஞன் பிரசார நடவடிக்கைகளுக்காகச் சென்ற வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களிடம் அவர்களை எதிர்ப்பதற்கான காரணத்தை கீழ் வருமாறு விளக்குகின்றார்.

அதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய தான் வந்திருக்கிறார். நீங்கள் கடந்த தேர்தலில் வாக்கு போடக்கூடாது என்றீர்கள்.

இந்த நிலையில் உங்களுக்கு ஒரு விடயம் தெரிந்திருக்க வேண்டும், இந்த முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் கோட்டபாய தான் வருவார் என்ற விடயம்.

அத்துடன் முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற ஒரு அமைப்பு இருந்தது. அந்த அமைப்பை இரண்டாக்கி அதில் ஒருவருக்கு பணம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம் பணம் கொடுத்தவர் கஜேந்திரகுமார். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சென்று பாருங்கள் ரெக்கோட் காணப்படுகிறது. உங்கள் கதைகள் அனைத்தையும் விடுங்கள். ஒவ்வொரு கட்சிகளின் கதைகளும் எங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post