லண்டனில் பதற்றம்! போராட்டக்காரர்களும் பொலிஸாரும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சிகள்!!

லண்டனில் உள்ள பிரதமர் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதிக்கு முன்னால் பெரும் போராட்டம் ஒன்று நடந்துள்ளது.

அங்கே ஏற்கனவே கூடி இருந்த ஆர்பாட்டக்காரர்களான கறுப்பின மக்கள், நம்பர் 10 டவுனிங் வீதிக்கு முன்னால் போடப்பட்ட வீதித்தடைகளை தூக்கி எறிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பொலிஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இச் சம்பவத்தில் பொலிசார் பலரை கைதுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




Previous Post Next Post