யாழ்ப்பாணத்தில் ஆவா குழுத் தலைவன் கைது!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வைத்து ஆவா குழுவின் தலைவர் என்று கூறப்படும் ஆவா வினோதன் என்பவர் விசேட அதிரடிப்படையினரால் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களில் ஆவா வினோதன் தொடர்புபட்டுள்ளதாக குறிப்பிட்டு, பொலிசாரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post