நாளை அரச விடுமுறை! ஊரடங்குச் சட்டமும் அமுல்!!

நாளை வியாழக்கிழமை அரச விடுமுறையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

நாளைம ஜூன் 4ஆம் திகதி மற்றும் ஜூன் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நாளை அரச விடுமுறையாகப் பிரகடனப்படுத்தப்படுவதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை பௌர்ணமி விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக நாளை பிரகடனப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post