கடும் காற்றினால் முறிவடைந்த மரங்கள்! ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியாவில் திடீரென வீசிய பலத்த காற்றினால் வீதியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக மழையுடனான காலநிலை நிலவி வரும் நிலையில் இன்று மதியம் வீசிய பலத்த காற்றினால் பல மரங்கள் முறிவடைந்துள்ளது.

திடீரென மரங்கள் வேரோடு சாய்ந்து வீதியின் குறுக்காக வீழ்ந்தமையால் குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர்பிழைத்துள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

முறிந்து வீழ்ந்த மரங்களை அவ்விடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் உடனடியாக அகற்றியதுடன்இ குறித்த வீதியூடான போக்குவரத்தும் சிலமணி நேரங்கள் தாமதமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.


Previous Post Next Post