யாழில் மயக்கமடைந்த சந்தேக நபர்! மலவாசலுக்குள் இருந்து மீட்கப்பட்ட ஹெரோயின் பைக்கெற்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மலவாசலில் இருந்து 4 பக்கெட்டுக்கள் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் சந்தேக நபர் யாழ்ப்பாணம் மறியல்சாலையில் இன்றிரவு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 300 மில்லிக்கிராம் (பக்கட்டுகளுடன்) ஹெரோயின் பக்கட்டுக்கள் நான்கு அவரது மல வாசலில் இருந்து மீட்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து சந்தேக நபர் மயக்கமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் பி அறிக்கை நாளை நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post