கோவிட் -19 நோய்த் தடுப்பு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக கரவெட்டியில் திருமண மண்டபம் ஒன்றில் விழாக்கள் நடத்த 14 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
துன்னாலையில் உள்ள மணி மண்டபம் ஒன்றே இவ்வாறு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த தடை கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
அந்த மண்டபத்தில் நேற்று ஜூலை முதலாம் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது விருந்தினர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறியமை, விருந்தினர்கள் முகக் கவசம் அணியாதிருந்தமை மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தாமல் முன் அனுமதியின்றி நிகழ்வை நடத்தியமை ஆகிய குறைபாடுகளுக்காக 14 நாள்கள் எந்த நிகழ்வும் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
துன்னாலையில் உள்ள மணி மண்டபம் ஒன்றே இவ்வாறு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த தடை கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
அந்த மண்டபத்தில் நேற்று ஜூலை முதலாம் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது விருந்தினர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறியமை, விருந்தினர்கள் முகக் கவசம் அணியாதிருந்தமை மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தாமல் முன் அனுமதியின்றி நிகழ்வை நடத்தியமை ஆகிய குறைபாடுகளுக்காக 14 நாள்கள் எந்த நிகழ்வும் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.