
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
25 வயது மதிக்கத் தக்க இளம் பெண் ஒருவர் யாழ்.பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உறவினர் வருகைக்காக காத்திருந்திருக்கின்றார்.
அவ்வேளை அவரை அணுகிய குறித்த நபர் அந்தப் பெண்ணின் விலை என்ன? என்று கேட்டதாகவும் முதல் தடவை தான் அதனை கண்டுகொள்ளாமல் விட்டிருந்த நிலையில் மீளவும் தன்னை அணுகி தனது விலை என்ன? என்று கேட்டதாகவும் சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் அங்கிருந்த மக்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த நபரின் சேட்டைப் பிடித்து கடுமையாகத் தாக்கிய குறித்த பெண் அவரை கீழே விழுத்தியும் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலின் போது அந்தப்பகுதியில் பெருமளவான மக்கள் கூடியிருக்கின்றனர். தாக்கிய பெண் அந்த நபரை பொலிஸ் நிலையம் செல்ல வருமாறு இழுத்தபோது மக்கள் தடுத்து சமரசம் செய்து அனுப்பிவைத்ததாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.