காதல் தோல்வி! யாழில் இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை!!

யாழ்ப்பாணம், வடமராட்சி-தும்பளைப் பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எஸ்.மரின்ராஜ் (வயது-23) என்ற இளைஞனே நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

இவர் காதல் தோல்வியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post