எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இந்த அதிசய சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான்,வைரவர் போன்ற விக்கிரகங்களில் இருந்தே நீர் போன்ற திரவம் வடிகிறது.
இதனை அறிந்த பெருமளவான பொதுமக்கள் ஆலயத்துக்குச் சென்று நீர் வடியும் விக்கிரகங்களை பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றனர்.
இது தொடர்பில் ஆலய ஸ்தபதி அராலியூர் ஈஸ்வரன் தெரிவிக்கையில், விக்கிரகங்களின் வாயில் இருந்து இவ்வாறு திரவம் வருவது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயற்பாடு என கூறுகின்றார்.
இதேவேளை கும்பாபிஷேகம் நிறைவடைந்தவுடன் இந்த அற்புதம் நிகழ்வது மிக நிண்டகாலமாக நடப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.