இலங்கையில் கொரோனா தொற்றால் 14ஆவது நபர் உயிரிழப்பு


கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குளியாபிட்டியவைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் 14ஆவது நபர் உயிரிழந்துள்ளார்.

இதுவரை நாட்டில் 6 ஆயிரத்து 28 பேர் கோரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிமோனியா மற்றும் இதய நிலை காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்தவரே இன்று உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Previous Post Next Post