நாட்டில் 16ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழப்பு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட கொழும்பு -2ஐச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் 16ஆவது நபர் உயிரிழந்துள்ளார்.

அரச தகவல் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரே இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு கோரோனா தோற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் 7 ஆயிரத்து 869 பேர் கோரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post