யாழில் இயங்க ஆரம்பித்தது கொரோனா வைத்தியசாலை! மக்கள் எதிர்ப்பு… பொலிஸார் குவிப்பு… (வீடியோ)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றிரவு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கோவிட் – 19 சிகிச்சைப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கோவிட் -19 நோய் சிகிச்சை நிலையம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நிலையில் முதலாவது கோவிட் -19 நோயாளியாக அவர் இன்று மாலை சேர்க்கப்படவுள்ளார்.

மருதங்கேணி பிரதேச மருத்துவமனை கோவிட் -19 சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு உள்ளூர் மக்கள் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனை முன்பாக இன்று காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Previous Post Next Post