கோவிட் -19 நோயால் 24ஆவது நபர் உயிரிழப்பு; 3 வாரங்களில் 11 பேர் சாவு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டில் 24ஆவது் கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 13 இல் வசிக்கும் 78 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 3 வாரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கடந்த ஜனவரி முதல் 11 ஆயிரத்து 744 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்து 581 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post