4 பிள்ளைக்கு நஞ்சூட்டி, தானும் நஞ்சருந்திய தாய்! 16 வயது மகள் உயிரிழப்பு!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
குடும்ப தகராறு காரணமாக திருகோணமலையில் பெண் ஒருவர் தனது நான்கு மகள்களுக்கும் இன்று (06) விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களில் மூத்த மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று உப்புவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குடும்பம் கிளிநொச்சியில் வசித்து வருகின்றது. பெண்ணின் கணவர் திருகோணமலை ஆனந்தபுரியில் வேலை நிமித்தம் வசித்து வருகின்றார்.

இவர் ஆனந்தபுரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மெய்க்காப்பாளராக பணிபுரிந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோயிலின் மத நடவடிக்கைகளுக்காக ஆனந்தபுரி பகுதியில் தங்க கணவர் முடிவு எடுத்துள்ளார். இதனால் அவர் நீண்டநாட்களாக வீட்டிற்கு செல்லாமல் ஆனந்தபுரி பகுதியில் தங்கி வேலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து குறித்த பெண்ணும் தனது பிள்ளைகளுடன் திருகோணமலைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அவரது மனைவி நஞ்சு உட்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் என்.விதுஷிகா (16) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விஷம் குடித்த சிறுமிகளின் தாயான நிஷாந்தன் நாகேஸ்வரி (31) மற்றும் விஷம் குடித்த மகள்கள் என்.நிஸ்வரி (12), என்.ஐஸ்வரி (08) மற்றும் என்.கதிரியா (02) ஆகியோர் திருகோணமலை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை உப்புவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Previous Post Next Post