இலங்கையில் கொரோனாத் தொற்று! மேலும் இருவர் உயிரிழப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் இலங்கையில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வடைந்துள்ளது.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 68 வயதுடையவரும் கிராண்ட்பாஸைச் சேர்ந்த 81 வயதுடையவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கடந்த ஜனவரி முதல் 11 ஆயிரத்து 335 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்து 249 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post