யாழில் அடுத்தடுத்து இளம் பெண்கள் தற்கொலை! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று உரும்பிராய் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் உ.கம்சனா (வயது-20) என்ற இளம் பெண்ணே இவ்வாறு வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 18 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்தாளாகக் கடமையாற்றும் இளம் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தாமரா பரம்சோதிநாதர் என்ற 29 வயது இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இள வயதினர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post