அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தற்கொலை!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

18 வயதான வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து புகலிடம்கோரிய வருண்ராஜ், Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆரம்பத்தில் மெல்பேர்னில் வாழ்ந்த வருண்ராஜ், Sale பகுதியில் குடியேறிய பின்னர் தனிமையாக உணர்ந்ததாகவும், இதனால் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருந்ததாகவும் தெரிக்கப்படுகிறது.

இதுதவிர அவர் பூரண மனநலத்துடன் இருந்ததாகவும் அவரது தாயார் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் குறிப்பிட்டார்.

Sale-இலிருந்து மெல்பேர்னுக்கு வந்த வருண்ராஜ், கடந்த 5ம் திகதி சனிக்கிழமை மெல்பேர்னில் தங்கியிருந்தபோதே தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.
Previous Post Next Post