யாழில் தொலைபேசியால் பரிதாபமாகப் பறிபோன பெண்ணின் உயிர்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.நாவாந்துறை பகுதியில் திருமண வீட்டிற்கு சென்ற பெண் ஒருவர் தடுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதுடன்,  சம்பவத்தில் உடுவில் பகுதியை சேர்ந்த சு.நிமலினி (வயது 42) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார். 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

யாழ்.உடுவில் பகுதியிலிருந்து 15 வயதுச் சிறுவனுடன் குறித்த பெண் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காகத் துவிச்சக்கரவண்டியில் நாவாந்துறைப் பகுதிக்கு வந்துள்ளார். 

இந் நிலையில் குறித்த சிறுவனும், உயிரிந்த பெண்ணும் தொலைபேசியில் தங்கள் கவனத்தைச் செலுத்தியதால் தடுக்கி விழுந்துள்ளனர்.  

இதனையடுத்து படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். 

. உயிரிழந்த பெண் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.
Previous Post Next Post