பிரித்தானிய இளவரசரின் மரண சடங்கு 30 பேருடன் நடைபெறும்! பிரதமர் பங்கேற்க மாட்டார்!!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • குமாரதாஸன், பாரிஸ்.
மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளை நாட்டில் அமுலில் உள்ள கொரோனா சுகாதார விதிமுறைகளை அனுசரித்து முப்பது பேருடன் மட்டுமே நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு St George's Chapel இல் நடைபெறவுள்ள இறுதி நிகழ்வில் இளவரசர் ஹரி உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முப்பது பேர் மட்டுமே பிரசன்னமாகுவர் என்று தெரிவித்து அவர்களது பெயர் விவரங் களை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
 
முப்பது பேரில் ஒருவராக பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று அவரது டவுனிங் வீதி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அரச குடும்பத்தில் நெருக்கமான வேறு ஒருவருக்கு இடமளிக்கும் பொருட்டே பிரதமர் இறுதி நிகழ்வைத் தவிர்க்கிறார் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் முரண்பட்டுக் கொண்டு மனைவி மேகன் மெர்க்லுடன் அரச அடையாளங்களைத் துறந்துவிட்டு வெளியேறிய இளவரசர் ஹரி, தனது
பேரனாரது இறுதி நிகழ்வில் பங்கு பற்றுவதற்காக அமெரிக்காவில் இருந்து
புறப்பட்டுவரவுள்ளார். மனைவி மேகன் கருவுற்றிருப்பதால் மருத்துவர்களது ஆலோசனையின் பேரில் அவர் வருகை தர மாட்டார் என்று அரண்மனை தெரிவி த்துள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு இறுதி நிகழ்வு ஆரம்பிக்க முன்னர் நாடு முழுவதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.பிலிப்பின் உடல் வைக் கப்பட்ட பேழையைப் பொதுமக்கள் எவரும் நேரில் பார்வையிட அனுமதி வழங்கப்படமாட்டாது.

பிலிப்பின் உடல் விசேடமாக வடிவமைக் கப்பட்ட 'லான்ட் ரோவர்' (Land Rover) வாகனத்தில் இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்படும். தனது உடலைச் சுமந்து செல்லும் இறுதி ஊர்வல வண் டியை வடிவமைப்பதில் இளவரசர் பிலிப் பும் பங்கு கொண்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் விதிகள் காரண மாக இரங்கல் செய்தி எழுதும் புத்தகங்கள் பொது இடங்களில் வைக்கப் படமாட்டாது. அவை இணையத்தில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post