நடு வீதியில் நடந்த குடும்பச் சண்டை! மாமி மற்றும் மச்சான் மீது மருமகன் கத்திக் குத்து!! (படங்கள்)


வவுனியா கண்டி வீதி, வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மருமகன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் மாமியார் மற்றும் மைத்துனன் ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (16) பிற்பகல் வவுனியா வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மரம் ஒன்றுக்குப் பின் மறைந்திருந்து மனைவியின் சகோதரனான மைத்துனனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளார். 

முரண்பாடு முற்றிய நிலையில் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றினால் மைத்துனனின்  இடுப்பு, முதுகில் குத்தியுள்ளார். இதனை அவதானித்த மாமியார் ஓடிச் சென்று தடுக்க முற்பட்டபோது அவருக்கும் கையில் கத்தியால் குத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கத்திக்குத்து மேற்கொண்ட கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞனை அப்பகுதியிலிருந்தவர்கள் தடுத்து வைத்திருந்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது - 35), அசோகன் வசந்தி (வயது - 52) எனவும் இவ்வாறு இவர்களுக்கிடையே குடும்ப முரண்பாடுகள் நீண்டநாட்களாக இடம்பெற்று வந்துள்ளதாகவும் இதன் வெளிப்பாடே இன்றைய கத்திக்குத்துச் சம்பவம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.

Previous Post Next Post