யாழில் கொரோனாத் தொற்றுக் காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான வயோதிபப் பெண்கள் இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களில் ஒருவர் கொக்குவில் மஞ்சவனப் பதி பகுதியைச் சேர்ந்த 95 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் என்றும்,

மற்றையவர் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 87 வயதான வயோதிபப் பெண் என்றும் தெரியவந்துள்ளது.

நோய்த் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே அவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Previous Post Next Post