யாழில் கோவிலுக்குச் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு! பரிசோதனையில் கொரோனாத் தொற்று!!


யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் கோவில் வாசலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தாயாரான ஸ்ரீ ராஜேந்திரா சந்திரவதனா (வயது 68) என்பவர் நேற்று வல்வெட்டித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் கொட்டடி ஆலயம் ஒன்றுக்கு வந்திருக்கின்றார்.

ஆலய வாசலில் நின்றிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.

அவருடைய மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் விசாரணை மேற்கொண்டார்.

அதன் தொடராக இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post