கொழும்பில் 31 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்!


இலங்கையில் ஆறு இணையர்களின் பிறப்பு இன்று அதிகாலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 12.16 முதல் 12.18 வரை சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

31 வயது பெண் ஒருவர் 3 பெண் குழந்தைகளையும் 3 ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

ஆறு குழந்தைகளும் அவர்களின் தாயும் நலமுடன் இருப்பதாகவும், குழந்தைகளின் பெற்றோர் கொழும்பில் வசிப்பவர்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Previous Post Next Post