யாழில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்!!! (படங்கள்)

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவத்தினால் அந்தப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

மானிப்பாய் – கைத்தடி வீதியில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஹைஏஸ் மற்றும் துவிச்சக்கர வண்டி விபத்தில் , துவிச்சக்கர வண்டியில் பயணித்த , உரும்பிராய் அன்னங்கை பகுதியை சேர்ந்த குணசிங்கம் சுதன் (வயது 45) என்பவர் உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து அங்கு கூடியோர் , மல்லாகத்தை சேர்ந்த ஹைஏஸ் சாரதியை பிடித்து நயப்புடைத்துள்ளனர். அதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் அங்கு சென்ற போது பெருமளவானோர் அங்கு கூடி அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்தனர்.

அதனால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை மருத்துவமனையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததுடன் , வாகன சாரதியை கைது செய்து, வாகனத்தையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous Post Next Post