குறித்த குழந்தை ஏணையில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்கு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.