
ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் முன்னாள் தலைவரே இந்தத் தாக்*குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என ‘Toronto Star’ கூறியுள்ளது.
கனடா ஐயப்பன் ஆலய குருசாமி இலங்கையில் வைத்து அடி*த்துக் கொல்*லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கனடாவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை காவல்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளதாக கனடா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் குருசாமி அவர்கள் தாயகத்தில் அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம்ம் அனலைதீவுக்கு சென்றிருந்த போது அங்கே ஒரு கும்பலால் கடு*மையாகத் தாக்*கப்பட்டார்.
இந்தத் தாக்*குதலில் அவர் படு*காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் கிட்டத்தட்ட அடி*த்துக் கொல்*லப்படும் தருவாயில் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணையில் வெளியான தகவல்கள் இந்தக் கொ*லை முயற்சி வழக்கு தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே நான்கு பேர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐந்தாவது மற்றும் முக்கிய சந்தேக நபராக கனடாவில் வசிக்கும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆலய நிர்வாகம் மற்றும் அதிகாரப் போட்டி தொடர்பான விரோதமே இந்தத் தாக்*குதலுக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கனடாவிலிருந்து கொண்டே கூலிப்படையினரை ஏவி இந்தத் தாக்*குதலை நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கனடாவில் ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட பிணக்குகள் கடல் கடந்து இலங்கையில் வன்முறையாக மாறியிருப்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.