முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை!


கோவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சு இன்று (05) காலை வெளியிட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படாதவர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post