நாளை காலை 7 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்!

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய இன்று (09) இரவு 7 மணி முதல் நாளை (10) காலை 7 மணி வரை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொது வீதிகள், ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ள ஊடக வெளியிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post