நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது!

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (மே 13) வெள்ளி்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை பிற்பகல் 2 மணிக்கு மீளவும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மறுநாள் (மே 14) சனிக்கிழமை 6 மணிக்கு நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post