எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

இன்று முதல் வழமைப்போல் எரிபொருளை நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று முதல் 5,000 மெட்ரிக் டன் பெற்றோலும், 3,500 மெட்ரிக் டன் டீசலும் சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளோம்.

எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் எரிபொருள் தாங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

மத்திய வங்கி அதற்கான நிதி ஒதுக்கத்தை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
Previous Post Next Post