![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpwBl76CnoRGpL8FFQduioSQ5UZLxGj5t5509z9wHNz0IC64Y01cVVyaH2MC5O-YJitQu2Vu6EZMXxaSV5jwP9cJjjwtiW29G_Dfr7sB5d2w5IoYsQIxTNRiBB2X2hG3BlUXk-LwjxTF0/s1600/01.jpg)
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் மடத்தடிப்பகுதியில் மரணச் சடங்கு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மரணச்சடங்கில் இரு தரப்புக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது வாள் வெட்டு சம்பவமாக மாறியுள்ளது.இந்த வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.