யாழ்.குடாநாட்டில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் மழை! நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை டிசெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிவு புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று மாலை முதல் யாழ்.குடாநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post