யாழில் கொரோனாத் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post