ஊரடங்கு தொடர்பில் பரவி வரும் போலித் தகவல்!


நாடளாவிய ரீதியில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றது.அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,தேவை ஏற்பட்டால் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதிக்கும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்,மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அது நிராகரிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post