
நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 11 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 134 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 238 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.