யாழில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்து! இளைஞன் உயிரிழப்பு!!


நீர்வேலி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞான வைரவர் ஆலயம் முன்பாக நேற்று  சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இளைஞன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த சீமெந்து கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தார்.

அதன் போது , கட்டில் காணப்பட்ட இரும்புக்கம்பி அவரது நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளது. அதனால் படுகாயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post