கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்! சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!!


ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒக்டோபர் முதல் நாளில் நாடு மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனைக்கு வருகை தந்து எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், இலங்கையில் கோவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை மீண்டும் திறப்பது குறித்து அடுத்த சில நாட்களில் சிறப்புக் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளின்படி சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
Previous Post Next Post