![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHrLENqsxIjzvOufas6HJepEnRKJfbnWtjCmQg6H3nRyLbnkeRouvAY4UeppJGLEY1IonoSZjRwhX8cCjFNaps3L8qAvLt_NRy6G3jE4yt6mYyl8DMFPBrHtwgFF5IiBa0Mm5ivQSs1hU/s16000/00.jpg)
விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கறிகளை விற்பனைக்கு கொண்டு சென்ற சமயம் இன்று 25.09.2021 சந்தைப் பகுதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் வசித்துவரும் பலனியான்டி மகேந்திரம் என்ற 66 வயதுடைய நபரே இவ்வாறு தருமபுரம் சந்தைப்பகுதியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரினச டலம் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.