யாழ். பருத்தித்துறை வல்லைப் பாலத்தில் விபத்து! (படங்கள்)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் வல்லைப் பாலத்தின் முன் சில் காற்று போன நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி பிக்கப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெய்வாதீனமாக சாரதி மற்றும் அதில் பயணித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த விபத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை வாகனமே பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. அச்சுவேலி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Previous Post Next Post