யாழப்பாணம் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் இன்று அதிகாலையில் அடித்து உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட் கிழமை அதிகாலையில் 3.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த கிறிஸ்தவ தேவாலயத்திற்குற் நுழைந்த நபரினால் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று திங்கட் கிழமை அதிகாலையில் 3.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த கிறிஸ்தவ தேவாலயத்திற்குற் நுழைந்த நபரினால் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.