![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJocTS-hP-XrJ5IcrAZ1m_Eu8R6058dYn_78kfiHoWBpnoyTVOFAegx_9FMCLVK8_9mV81wz4I227i5qrUlAXIN58d_HDuLHzkQSBNKOnaNxxpLz2ObkazhKGW848gBgvrBd91mHPe1lfzjfxxpa1ufKn3TVqpyNGV342-E1f1GVpAd6vZL8Bl_YVG/s16000/311f9e00-e106b059-e450411e-curfew_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg)
தற்போது பரவலாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் சூழலில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சற்று முன்னர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணிவரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.