![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5jSbNOlwGISPBRuCrh9YAWHbs6LjbbvuK4yARvA05si4hoNCJfMsDjvL8abzPNDe8106jus_VsKX1yYXrQaPMd6nmYgALJ9klQRC9llqGgwfdEsIomuxCTA8IaiQ_Nvxuvx7_sIktaE-OFGrWFG24pIQrkD3IBMUtQY0QKSvNrcTjn5QPwodF51f3/s16000/fired.jpg)
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மஹிந்த ஆதரவுக் குழுவினர் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வீடுகள், சொத்துக்கள் தொடர்ச்சியாக தீவைக்கப்பட்டும், அடித்து நொருக்கியும் சேதமாக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையிலேயே வன்முறைகளில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு தீங்கிழைக்கும் வகையில் செயற்படுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு அதிகாரம் அளித்து பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.