தொலைபேசி – தொலைகாட்சி சேவை கட்டணங்கள் அதிகரிப்பு!

தொலைபேசி சேவை வழங்குநர்கள் மற்றும் தொலைகாட்சி சேவை வழங்குநர்களுக்கு தமது சேவை கட்டணத்தில் அதிகரிப்பை மேற்கொள்வதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நிலையான தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள், இணைய சேவைகள், செய்திமதி தொழில்நுட்ப தொலைகாட்சி சேவைகள் மற்றும் கேபல் தொலைகாட்சி சேவைகளுக்கு இவ்வாறு கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளைய மறுதினம் (05) முதல் இந்த சேவை கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
Previous Post Next Post