![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYlNHPb2HRQyWLcaivh7kX1siKGOBG1OKiiGTeFz1kqGNvFXb4j376_f45wpju2HP1pH7eD5_TTi39OeCBrNXeGhwQMkmpu4Wj_0tzS4Rd2Xq6d4LsgBss-d_FQlH2v_JQQZOzbOzKI4wtD1iCeazVxj-oTMd6nITwNI9IpLQxXkI_sbrY5CIOFiOP/s16000/e1ea69_695b1df323ec46c1b50ba18ec8a44a34_mv2.jpg)
பெண் ஒருவரது இடுப்புப் பகுதியே குப்பை சேகரிக்கும் பை ஒன்றினுள் இன்று நண்பகல் வேளை கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகக் குற்றவியல் பொலீஸ் வட்டாரங்களை ஆதாரம் காட்டிப் பாரிஸ் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்துப் பாரிஸ் நகரில் 19 ஆவது நிர்வாகப் பிரிவில் (XIXe arrondissement) அமைந்துள்ள அந்தப் பூங்கா உடனடியாக மூடப்பட்டிருப்பதாக அந்த நிர்வாகப் பிரிவின் முதல்வர் பிரான்ஷூவா டானியோ (François Dagnaud) தெரிவித்திருக்கிறார். பாரிஸ் நீதித்துறைப் பொலீஸ் பிரிவின் குற்றவியல் பகுதியினர் பூங்காவை மூடி அங்கு சோதனைகளை நடத்தி வருகின்றனர்.