![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdHAc-JzcqXPPxPHIrY_PEVkBMB146WX23lJC8B_50H4KkkZ9Wgj3YntnEBZ0Jm5iShQiBEeKYGSrcqddpsUSgpjiKntaP_4u5IwEpdoX5JPlFnOSkLINDQJV1_luHGzJ9m9BQUGR3JclIZTmhZuGnB6ufdn4-OVMQ3TzU1CJ5k-eIHDxzdjML7fkP/s16000/24234590lpw-24234612-article-jpg_9369241_660x287.jpg)
நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் Melun (Seine-et-Marne) நகரில் உள்ள அடுக்குமாடி குயிருப்பு ஒன்றில் இருந்து அவசர இலக்கத்துக்கு அழைப்பு ஒன்று பெறப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மருத்துவ உதவிக் குழுவினர், 45 வயது மதிக்கத்த நபர் ஒருவர் 8 ஆவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதை பார்த்துள்ளனர். குறித்த நபர் சம்பவ பலியாகியிருந்தார்.
காவல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரது வீடு சோதனையிடப்பட்டது.
பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திறந்த காவல்துறையினருக்கு மேலும் அதிர்ச்சி காந்திருந்தது. உள்ளே தற்கொலை செய்துகொண்டவரது மனைவில் கத்திக் குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தார். அவரது உடலில் 11 இடங்களில் வெட்டுக்காயம் இருந்துள்ளன.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் Melun நகர காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.