![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNkMWRlVgzZOcMfoK-lXekwIh2BE51c_iOFMHSlisDVEUZKEN_M39jBlqvPAGweKdIoQ6Yh6sw_4XYrJxBgONGc1MgwhKvtKt3GfJhNhPI8HNWlgRfm7eQ-dwI_sgz20--zKJy7tUdyShG_4jt22cVEB7ioGmHSef8t7XrAeduDEN5jVVs0D-2En5w/s16000/00.jpg)
நேற்று முன்தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த மரண செய்தியை இன்று அறிந்த குறித்த குடும்பத்தரின் தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.