![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh31pFjli55hhD_oug7Qqh4wGBFh1Xs4SXNih_SlE7DyCGPlW53ZZ6n-FF7DcwJs-UNLVGVfXU7FYMi-iasqjgxSJwWOItOJcsuYKLfVxZeKGrjr4ermA0QZ7mcbC_gKZmij9gxXR4JIRX2Cw0cYAkvPabo90v_xcy4oPb2RDdvyj5bMYEaHAOIpbjz/s16000/00.jpg)
இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது.
100 வயது மூதாட்டியான பூரணம் இன்று மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த கொலைவெறியாட்டை அரங்கேற்றி நகைகளுடன் தப்பித்தவர் புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh_IKJCef_Xh0kq8aIpHBdKKrW4HcYoRpKBTFvI2A_XeJOe6oMOeuzRYaTsxVVLR3efqivL0ezu57K2QRulcoL32JlWdsCO9Po3CPrAv1VrZV_DJunTm1H_gVEB1VJfgVlYOgoZRDb0pQV61wAAwPbqMoz08loVUu2F0Y7Po8kh-naflYPtJUrDr0r/s16000/FB_IMG_1682599546165.jpg)