மரண அறிவித்தல் - முத்துலட்சுமி பத்மநாதன்

மண்டைதீவு சிறுப்புலத்தைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி முத்துலட்சுமி பத்மநாதன் இன்று 10.12.2019 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதன் தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதரம்பரநாதன் சிவயோகம் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பாத்மநாதனின் (பாலு) அன்பு மனைவியும்,

திருமகள் (சுவிஸ்) காலஞ்சென்ற திருவருள் மற்றும் திருவாசகி (பிரான்ஸ்), திருவருட்செல்வன் (சித்தா ரெஜிபோம் வேக்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபாகரன் (சுவிஸ்), கிருஸ்ணேஸ்வரன் (நேசன், அல்லைப்பிட்டி-பிரான்ஸ்), சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்லையா, அன்னப்பிள்ளை, லட்சுமியம்மா, சிவசுப்பிரமணியம், அப்பாத்துரை, அப்பாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தெட்சனாமூர்த்தி, அருணகிரிநாதன், சீதாலட்சுமி மற்றும் சத்தியபாமா (மணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நீருஜா, ஐஸ்மிரா, சந்தியா, விபூஜனன், தனுஷியா, மதுவந்தி, கேசிவாஸ்வன் ஆகியோரின் அன்புப் போர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 11.12.2019 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்  அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்புகளுக்கு
+94 75 039 4357

Previous Post Next Post